ஆண் அன்னை என்னும் ஒரு வார்த்தை கவிதைகளுக்கு இடையில் என் கண்களை இழுத்து, நெஞ்சில் நிற்கிறது.
பல வரிகளும் அப்படி தான்வாழ்க்கையில் நாம் அன்றாடம் பார்த்து, கவனிக்காமல் செல்லும் நிகழ்வுகளை இயல்பான நடையில் அழகாக எடுத்துரைக்கிறது இந்த நூல்.
காதல், பெண்ணியம், சுதந்திரம், தத்துவம், குடும்பம், அன்பு, நேசம், விடாமுயற்சி, சுயக்காதல் என எல்லா தலைப்புகளிலும் கவிதைகள் சலிப்படையா வண்ணம் இடம்பெற்றுள்ளது.
எதார்த்ததை எதார்த்தமாக சொல்வது அவ்வளவு எளிதல்ல.
அந்த கடினத்தை அவ்வளவு அழகாய் கையாண்டுள்ளார் புவனா.
-சிவானி பிரியங்கா மதியழகன்






Reviews
There are no reviews yet