பொதுவாக கண்ணில் காண்பவைகளை கவி வரைந்து விடுவேன்.எனது எண்ணத் தோன்றல்கள் அனைத்தும் எழுத்தின் வடிவமாகவே தான் உயிர்பெறும் காகிதத்தில். எதுவாகினும் பகிர்ந்து கொள்வதால் எழுத்துக்கள் எப்போதுமே இவளுக்கு மனம் நெருங்கிய சொந்தம்தான்… இயன்ற வரை என் இயல்பை மாற்றாமல் இதயத்தை இலகுவாக்கும் கவிதைகளுக்கு எப்போதும் என் மனதில் தனி இடம்…
எனவேதான்… இந்த தொகுப்பிற்கு “இதயத்தின் இருக்கை” எனப் பெயரிட்டுள்ளேன்.
இதில் எனது எண்ணத்தின் பிரதிப்பலிப்பை எழுத்துக்களின் மூலம் உயிர் கொடுத்ததோடு, அத்துணை உணர்வுகளையும், சிறு சிறு கருத்துக்களையும், ரசித்தவைகளையும் அனுபவங்களையும் கவியாக்கப் படுத்தியுள்ளேன்.







Reviews
There are no reviews yet