நான் அபர்ணா..!
சிறு ஆசைகளோடும் பெரு கனவுகளோடும் எழுத்தின் வண்ண உலகில் பயணிக்கும் ஒரு வழிப்போக்கி நான்.
சிறுவயதில் தொடங்கிய என் கற்பனை உலகம் இன்று விரிந்து கதை உருவாய் வளர்ந்து நிற்கிறது. இவ்வுலகத்தை ஒரு புதிய கோணத்தில் பார்க்க செய்யும் கதைகள் என்னை வியக்க செய்யும்.
“வெயில் கானா வானவில்” என்னும் எனது சிறுகதையில் அன்பும் காதலும் வாழ்வில் எவ்வளவு முக்கியமோ அதே போல் தன்னம்பிக்கையும் உறவினர்களின் துணையும் அவ்வளவு முக்கியம் என்பதை இந்த உலகிற்க்கு சொல்வதற்கான எனது சிறு முயற்சி.
மழைத்துளிக்குள் ஒளிந்திருக்கும் வானவில் வண்ணங்களை வெளிக்கொண்டு வரும் சூரிய ஒளியைப் போல பல பெண்களின் மேல் பூசப்பட்டிருக்கும் “பெண்” “கலாச்சாரம்” “குடும்ப மரியாதை” எனும் வேலிகளை தகர்த்து அவர்களும் வானவில்லாக பிரகாசிக்க சிறிய சூரிய ஒளியை போன்ற நமது ஆதரவு மட்டுமே போதுமானது. இதை சொல்லும் அழகிய கற்பனை கதையே இந்த “வெயில் காணா வானவில்” புத்தகம்.
ஒவ்வொருவரும் இந்த சிறிய கதை உலகில் என்னுடன் பயணிக்க விரும்புகிறேன்.







Reviews
There are no reviews yet